17/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 17/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷


குறள் : 54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

*பேனா முள் பத்திரிகையின் ஒன்பதாம் ஆண்டு விழாவை சிறப்பாக நடைபெற்றது*

15/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகையின் 9 ஆம் ஆண்டுவிழா ஆவடி,பருத்திப்பட்டு,லட்சுமி கிரீன் சிட்டியில் காலை 11.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது சுமார் 1000 நபர்களுக்கு பிரெஞ்சு சாதம் ,புடவை, போன்றவைகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் பத்திரிக்கையாளர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்

*🌹பேனாமுள் செய்திகள்*🌹

பதிவு
17/6/2024

தமிழக அரசு தமிழக மின் பற்றாக்குறையை போக்கும் விதமாக பல நல்ல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழக அரசின் பெயரை கெடுக்கும் விதமாக பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத ஆவடி மின்வாரியம்

*தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவித்தும் மதிக்காத ஆவடி மின்வாரியம் ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள 48 வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் இரண்டு வருடங்களாக லோ வோல்டேஜ் வந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் வீணாகி கொண்டே இருக்கிறது அதற்கு மின்சாரத்தை அதிகபடுத்த ட்ரான்ஸ்பார்ம் பொருத்தி மின்சாரத்தை சரி செய்ய வேண்டி பலமுறை தகவல் தெரிவித்தும் ஆவடி பருத்திப்பட்டுக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடவடிக்கை  எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தகவல்*

தொடர்ந்து மின்சாரத்திற்காக போராடிவரும் ஆவடி, பருத்திப்பட்டு, 48 வது வார்டில் உள்ள பகுதியில் மின் பற்றாக்குறை குறித்து மக்கள் கூறியது போல் இரண்டு வருடங்களாக வந்து வேலை செய்யாத மின்சார வாரியம் இப்போதா வந்து செய்யும் என்று கூறி ஆமை வேகத்தில் வேலை நடக்கிறது

அந்த மின் பற்றாக்குறை குறித்து பல தடவை
பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாலை மறியலில் ஈடுபடபோவதாகவும் தகவல் தெரிவித்தார்கள் தெரிவித்த மறுநாளே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரி அவர்கள் நேரில் வந்து இதுகுறித்து பேசி சமாதானம் செய்து மறுநாளே டிரான்ஸ்பார்மர் வேலை தொடங்கப்படும் என்று அறிவித்தார்
ஆனால் அந்த பகுதியில் ஆமை வேகத்தில் வேலை நடக்கலாமா வேண்டாமா என்ற என்னத்தில் வேலை நடக்கிறது
இரண்டு மூன்று நாட்களாக தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டாலும்  தொலைபேசியை இந்நேரம் வரை எடுக்கவே இல்லை சம்மந்தப்பட்ட ஆவடி,பருத்திப்பட்டு மின்வாரிய  அதிகாரிகள்

அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து மின்பற்றாக்குறை காரணமாக எங்க வீட்டு பொருள்கள் அனைத்தும் வீணாகி கொண்டே தான் இருக்கிறது
இதற்கு மின்வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை போராட்டம் மட்டுமே இதற்கு தீர்வு போராட்டம் செய்தால்தான் அவர்கள் உடனடியாக இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் பற்றாக்குறையை தீர்த்து வைப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படுத்தாதவாறு  உடனடியாக நடவடிக்கை எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் 
தங்கம் விலை இன்று 
18 K  தங்கம்/ g : ₹ 5485
22 K தங்கம்/ g. : ₹ 6704
24 K தங்கம்/g   : ₹ 7314
    வெள்ளி    /g   : ₹ 95.50

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி 
திமுக,  பாமக ,நாம் தமிழர் கட்சிகள் மோதுகின்றன.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நீட் கேள்வித்தாள் கசிந்த விவகாரம்: பின்தேதியிட்ட காசோலைகள் மீட்பு

நடந்த நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ஆறு பின்தேதியிட்ட காசோலைகளை, பீஹார் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: 

தெலங்கானாவில் ஐஏஎஸ் அதிகாரியாக வந்த தனது மகளை, `வெல்கம் மேடம்’ என அவரது தந்தையான எஸ்பி அழைத்து வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்:

செப்டம்பர் மாத டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு இம்மாதம் 18ம் தேதி(நாளை) காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளிிடப்படுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்* 🌹

✍️ காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்:

நெரிசலை குறைக்கும் வகையில் குன்னூர் செல்லாமல், காட்டேரி – மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு புதிய பாதை அமைக்கும் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் என்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழ்நாட்டில் 4 இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: 

தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக 4 இடங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. இந்நிலையில் 20ம் தேதி வரை மேலும் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நடுக்கடலில் படகு கவிழ்ந்தது 11 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள்

மூவரும் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பவில்லை.புஷ்பவனம் பகுதி மீனவர்கள் தேடி சென்றபோது, கோடியக்கரைக்கு தென்கிழக்கே படகு கவிழ்ந்து இருந்ததும், அந்த படகு மீது 3 பேரும் அமர்ந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்த மீனவர்கள், கவிழ்ந்த படகுடன் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மனைவி தற்கொலை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கணவன் சாவு

வேலூர்: கர்ப்பிணி மனைவி தற்கொலை செய்து கொண்டதால், நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மரத்தில் கார் மோதி ராணுவ வீரர், நண்பர் பலி

அதிகாலை 3 மணியளவில் புளியங்குடியை அடுத்த நவா சாலை அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் ராணுவ வீரர் பாஸ்கர், அவரது நண்பர் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நாட்டு வெடி குடோனில் தீ ஒருவர் பலி

நாட்டுவெடிகளை தயாரிப்பதற்காக வெடி மருந்துகளை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி மருந்துகள் வெடித்ததில் அந்த கட்டிடமே உருக்குலைந்து போனது.இதில் சதீஷ்குமார் பலியானார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல ‘ஒன்றிணைவோம் வாருங்கள்’ 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் தற்போது ஒன்றிணைய வேண்டும் என வி.கே.சசிகலா அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
.
✍️ கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஆமைகளின் எண்ணிக்கை 2.15 லட்சமாக அதிகரிப்பு: 

சென்னை: கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு 2.15 லட்சம் வரை ஆமைகளின் எண்ணிக்கையை குஞ்சு பொரிப்பகங்களின் மூலம் உயர்த்தி தமிழ்நாடு வனத்துறை சாதனை படைத்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து:

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ வீட்டில் பதுக்கிய யானை தந்தம் மான் தோலுடன் 4 பேர் கைது

திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படையினர், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதர் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு பதுக்கி வைத்திருந்த 2.9 கிலோ எடையுள்ள யானை தந்தம் மற்றும் புள்ளிமான் தோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அரசு பஸ்சில் இருந்து முதியவரை தாக்கி தள்ளி விட்ட டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

திருப்பூர்: அரசு பஸ்சில் இருந்து முதியவரை கீழே தள்ளி விட்ட வீடியோ வைரலானதால் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

ஞானமணி என்பவர் கடலூர் மத்திய சிறையில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். தனது கடன் பிரச்னையை தீர்க்க கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு வந்தவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி அவர்கள் மூலம் இந்த கொள்ளையை அவர் அரங்கேற்றி உள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்

காதலுக்கு வயது எந்த தடையும் இல்லை என்று நிரூபித்துள்ளார் 23 வயது சீன இளம் பெண். முதியோர் இல்லத்தில் தான் சந்தித்த 80 வயது தாத்தாவை அவர் காதலித்து மணந்தது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மோசடி: நிறுவன பெண் அதிகாரி கைது

சென்னை: முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த, ஏ.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவன அதிபர் ராபினின் நெருங்கிய தோழி கைது செய்யப்பட்டார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வு 7 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதல் நிலை தேர்வில், நாடு முழுதும் நேற்று 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை: நடிகர் தர்ஷன் கும்பல் கொடூரம்

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்ட ரசிகர் ரேணுகாசாமியின் உடலில், 34 இடங்களில் காயம் இருப்பதாகவும், அவரது மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சூப்பர்-8க்கு முன்னேறியது இங்கிலாந்து
✍️ விளையாட்டு ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸிதிரேலியா
✍️ 7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments